என்ன...! அண்ணாமலையாரும் கிரிவலம் வருகிறாரா...?

அண்ணாமலையாரும் வருடத்திற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லிக் கொண்டே கிரிவலம் வர வேண்டும்.
என்ன...! அண்ணாமலையாரும் கிரிவலம் வருகிறாரா...?
Published on

பக்தர்கள் கிரிவலம் வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் அண்ணாமலையாரும் வருடத்திற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். ஒன்று கார்த்திகை தீபத் திருநாளன்று, மற்றொன்று தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று.

அண்ணாமலையார் திருக்கோவிலில் வீற்றிருக்கும் செந்தூரப் பிள்ளையார், கம்பத்து இளையனார் (முருகன்), கருவறையில் உள்ள அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மையை வணங்கி, கிழக்கு திசையில் உள்ள ராஜகோபுரத்தின் முன் நிற்க வேண்டும். அங்கிருந்து கிரிவலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

கிரிவலம் செல்வதற்கு முன்தினம் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். சுத்தமான ஆடை அணிந்து, விபூதி பூசி, தானம் கொடுத்து, மலையைச் சுற்ற வேண்டும். காலணி அணிதல் கூடாது. பயம், கோபம், சோகம், குடும்பப் பிரச்னைகளை கோவிலின் முன் உள்ள பலிபீடத்தில் விட்டுவிட வேண்டும். வாகனங்களில் செல்லுதல், உரக்க சத்தம் போட்டு பேசுதல், கையை வேகமாக வீசி நடத்தல் கூடாது. ஒரு பத்துமாத கர்ப்பிணி பெண் எண்ணெய் குடத்தை தலையில் சுமந்துகொண்டு செல்வதைப் போல கிரிவலம் வரவேண்டும். சிவநாமம், பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லிக் கொண்டே கிரிவலம் வர வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com