விநாயகருக்கு சிதறுகாய்.. பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?

சிவபெருமான் தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.ஈசன் தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார்.
விநாயகருக்கு சிதறுகாய்.. பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?
Published on

வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் ஆகிய அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் சிவபெருமான் அழிக்கப் புறப்பட்டார். அப்போது, அவருடைய தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.

விநாயகரை வணங்காமல் சென்றதால் தான் இந்தத் தடை என்பதை உணர்ந்த சிவபெருமான், உடனே பிள்ளையாரை நினைத்து வணங்கினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு, உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, 'முக்கண்ணனையே தனக்கு காணிக்கையாகத் தர வேண்டும்' என்றார் கணபதி.

எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com