கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

இந்த ஆண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டான நாளை (வியாழக்கிழமை) சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
Published on

உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டான சித் திரை மாதம் 1-ந்தேதி சித் திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டான நாளை (வியாழக்கிழமை) சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாளைஅதிகாலை4-30 மணிக்கு கோமாதா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

அப்போது பசு மற்றும் கன்றுகுட்டியை கோவிலின் கொடிமரம் முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் நிறுத்திவைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.

பின்னர் கோவிலின் மூலஸ்தான நடை திறக்கப் பட்டு அம்மன் கோமாதா தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து நிர்மால்ய பூஜையும் விஸ் வரூப தரிசனமும் நடக்கிறது. அதன் பிறகு கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது.

அப்போது கோவிலில் மூலஸ்தான மண்டபத்தில் காய்கனிகளை குவித்து வைத்து சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைரகிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது.

அதன் பிறகு காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11 மணிக்கு அம்மனுக்கு தங்க ஆபர ணங்கள் மற்றும் வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங் காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

11-30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு காய்கனிகளுடன் ஒரு ரூபாய் நாணயம் கை நீட்டமாக வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை கோவில் மேல்சாந்தி மணி கண்டன் போற்றி பக்தர்களுக்கு வழங்குகிறார்.

அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை6-30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மேள தாளம் முழங்க கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி3முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனை நடக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன் பொருளாளர் ரமேஷ் கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com