பித்ரு தோஷம் நீக்கும் ஜரத்காரு மகரிஷி பூஜை

நாளை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு.முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பித்ரு தோஷம் நீக்கும் ஜரத்காரு மகரிஷி பூஜை
Published on

பழந்தண்டலம், நாகாத்தம்மன் கோவிலில் உள்ள நல்லாங்கண்ணி திருக்குளம் பகுதியில் நாளை (12-ந்தேதி) பித்ரு தோஷம் நீக்கும் ஜரத்காரு மகரிஷி பூஜை நடை பெறுகிறது.

துவாபர யுகத்தில் தர்மம் நேர்மை தவறாது வாழ்ந்த ஜரத்காரு முனிவரை நினைத்து குருபூஜை செய்து நெய் மற்றும் நல்லெண்ணை கலந்த தீபமிட்டு அவரது துதி கூறி பிரார்த்தனை செய்தால் பித்ருதோஷம், பல ஆண்டுகளாக திதி விட்ட தோஷங்கள் முழுவதும் விலகி குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, ஆல விருட்சத்தில் மகரிஷி வர்ணனை, கலச பூஜை ஆவாகனம் நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு 108 மூலிகைகளால் மகரிஷி யாகம், மலர் அர்ச்சனை, ஜரத்காரு மகரிஷி திருக்கதை பாராயணம், மற்றும் மோட்ச தீபம் ஏற்றி கூட்டாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் பழந்தண்டலத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐராவதீஸ்வரர் சிவன்கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com