திருப்பதி கோவிலில் பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில் நுட்பம்

இந்த முறை சோதனை அடிப்படையில் மார்ச் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.கவுண்ட்டர்களில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
திருப்பதி கோவிலில் பக்தரின் முகம் அடையாளம் காணும் தொழில் நுட்பம்
Published on

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன், லட்டுப்பிரசாதம், அறை ஒதுக்கீடு, பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு பக்தரின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ளது.

தனிநபர் அதிக லட்டு டோக்கன்களை பெறுவதைத் தவிர்க்கவும், இலவச தரிசன வளாகத்திலும், அறை ஒதுக்கீடு மையங்கள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் கவுண்ட்டர்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com