பத்ரகாளி எனும் பிரத்தியங்கிராதேவி

ஆயிரம் கரங்களிலும் ஆயிரம் ஆயுதங்கள். இவள் மூல மந்திரம் 20 அட்சரங்கள் கொண்டது.நரசிம்மரை அடக்க எழுந்த சரப மூர்த்திக்கு உதவ முன் வந்தவள் பத்ரகாளி என்னும் பிரத்தியங்கிரா தேவி.
பத்ரகாளி எனும் பிரத்தியங்கிராதேவி
Published on

நரசிம்மரை அடக்க எழுந்த சரப மூர்த்திக்கு உதவ முன் வந்தவள் பத்ரகாளி என்னும் பிரத்தியங்கிரா தேவி.

இவள் பயங்கரத் தோற்றம் கொண்டவள். இவளை சரபத் தீ என்றும் கூறுவார்கள்.

இவளுடைய பெருமையை விளக்கும் ருக் மந்திரங்கள் ஒன்பது வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது 48 ருக் மந்திரங்கள் இவர் புகழை வெளிப்படுத்துவதால் இவள் அதர்வண பத்ரகாளி என்றும் அழைக்கப்படுவாள்.

பொதுவாக இந்த மந்திரங்கள் எதிரிகளை வீழ்த்தவே பயன்படுபவையாக உள்ளன.

நம்மீது பிறரால் ஏவி விடப்படும் தீய சக்திகள் இவள் பேரருளால் ஏவியவர்களைச் சென்று அழிக்கும் என்று ருக் மந்திரம் கூறுகின்றது.

சிம்ம ரூபம் கொண்டவள். சிம்ம முகம் உடையவள். இறைவன் ஸ்ரீ பைரவரின் துணைவி.

சூலம், பெரிய கபாலம், பாசம், டமருகம் இவை கொண்ட கரகமலங்கள்.

கோடிக்கணக்கில் தெற்றுப் பற்கள் நிறைந்த பொந்து போன்ற முகம்.

சிவப்பேறிய முக்கண்கள். பிறைச்சந்திரன் ஒளி வீசும் தலை. இப்படிப்பட்ட பிரத்தியங்கிரா எட்டு சர்ப்பங்களை அணிந்திருப்பாள்.

ஆயிரம் கரங்களிலும் ஆயிரம் ஆயுதங்கள். இவள் மூல மந்திரம் 20 அட்சரங்கள் கொண்டது.

இத்தகைய சிறப்புடைய பிரத்தியங்கிரா தேவியின் அவதாரத்தை அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com