தீபமே சிவ வடிவம்

தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.
தீபமே சிவ வடிவம்
Published on

தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.

இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்ரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றி குறிப்புகள் உள்ளன.

பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.

இதுதான் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். தீபங்கள் நமது கர்மவினைகளை நீக்கக் கூடியவை.

சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.

தீபங்கள் தீய சக்திகளை அண்டா வண்ணம் காக்கக் கூடியவை. வேண்டும் பலனைத் தரக்கூடியவை.

சிவத்தலத்தில் தீபம் ஏற்றுபவரும், ஏற்ற உதவியவரும் சிவலோக பதவி அடைவார்கள் என்பது திண்ணம்.

தொடர்ந்து தீபம் ஏற்றியவர்களின் பரம்பரையில் யாருக்கும் கண்பார்வை குறைபாடு வராது.

மிகுந்த புண்ணியம் சேரும்.

சிவன் சந்நிதியில் அணைய இருந்த தீபத்தை தன்னை அறியாமல் தூண்டி விட்ட எலி மறுவிறவியில் மகாபலி சக்கரவரத்தியாக பிறந்தது என்றால் தீபத்தின் பெருமையினை நாம் உணரலாம்.

திருக்கார்த்திகை திருநாளன்று அவரவர் இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருளை பெறலாம்.

ஏற்றப்படும் தீபம் சிவபெருமானின் வடிவம் ஆகும்.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை தீப வடிவில் வழிபடும் நாள் இந்த கார்த்திகை தீபத்திருநாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com