260 கோடி வயது கொண்ட திருவண்ணாமலை

திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.பழநி மலை முருகனுக்கு நவபாஷாணச் சிலை செய்த போகர்தான் இதையும் செய்தது.
260 கோடி வயது கொண்ட திருவண்ணாமலை
Published on

திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.

அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

இது உலகிலேயே மிகப் பழமையான மலை என்று டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

முதல் கணக்கெடுப்பின் படி மலையின உயரம் 2665 அடி.

போகர் செய்த சிலை

அண்ணாமலையார் சந்நிதிக்கு நேராக மலையின் பின்புறம் உள்ள பகுதி, நேர் அண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது.

இங்கே மண்டபம், கருவறை உண்டு. பின்னாக உண்ணாமலை அம்மை தீர்த்தமும் உண்டு.

இங்குள்ள பழநி ஆண்டவர் சந்நிதியில் ஒரு மூலிகையிலான சிலை இருந்தது.

பழநி மலை முருகனுக்கு நவபாஷாணச் சிலை செய்த போகர்தான் இதையும் செய்தது.

ஆனால் ரொம்ப காலத்துக்கு முன்பே இது களவாடப்பட்டு விட்டது.

இங்கிருந்து பார்த்தால் மலையில் உள்ள கண்ணப்பர் கோவில் தெரியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com