என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
![நான் சூப்பர் முதலமைச்சர் இல்லை: கவர்னர் தமிழிசை நான் சூப்பர் முதலமைச்சர் இல்லை: கவர்னர் தமிழிசை](https://media.maalaimalar.com/h-upload/2023/11/17/1982631-tamilisai3.webp)
நான் சூப்பர் முதலமைச்சர் இல்லை: கவர்னர் தமிழிசை
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன்.
- இணையதள பயன்பாட்டாளர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் நடந்த பழங்குடியினர் விழாவில் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது குறித்து 2 துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்துதான் பழங்குடியினர் தரையில் அமர வைக்கப்பட்டது போல் செய்திகள் வருகிறது. அது தவறானது.
நான் ஆந்திராவில் 6 பழங்குடியின கிராமங்களை தத்து எடுத்துள்ளேன். அங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் தரையில் அமரக்கூடாது என்பதற்காக எனது சொந்த செலவில் நாற்காலிகளை வாங்கி கொடுத்துள்ளேன். இப்படி இருக்கையில் நான் எப்படி பழங்குடியினரை அரசு விழாவில் தரையில் அமர வைத்ததற்கு காரணமாக இருக்க முடியும்?
எனது ஆளுமைக்குட்பட்ட புதுவையில் இத்தகைய நிகழ்வு நடந்திருக்கவே கூடாது. அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இது குறித்து இணையதள பயன்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்கள் நாகரிகமாக எழுதுவது அவசியம்.
நாங்கள் மேடையின் கீழ் அமர்ந்திருந்ததால் எங்களுக்கு பின்னால் அவர்கள் அமர்ந்திருந்ததை பார்க்க முடியவில்லை. மக்களுக்கு தவறான தகவல்கள் சென்று விடக்கூடாது.
புதுவையில் நான் சூப்பர் முதல்வர் என செய்திகள் வருகிறது. நான் சூப்பர் முதல்வர் இல்லை. ரங்கசாமி தான் சூப்பர் முதல்வர். நான் தினமும் என்னை பற்றி என்ன செய்தி வந்திருக்கிறது என பார்ப்பதில்லை. குறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தால் துறை அதிகாரிகளிடம் பேசி, புதுவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைதான் பார்ப்பேன்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)