என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பூப்பறிக்க சென்ற விவசாயி மயங்கி விழுந்து சாவு
- சந்தேகமடைந்த குடும்பத்தினர் பழைய வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
தவளகுப்பம் முத்து முதலியார் நகரில் தனியார் அப்பார்ட் மெண்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்தவர் கிருஷ்ண மூர்த்தி வயது 57) இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
கிருஷ்ண மூர்த்திக்கு சொந்தமாக அபிஷேக பாக்கத்தில் நிலம் மற்றும் வீடு உள்ளது.தினமும் காலை கிருஷ்ண மூர்த்தி நிலத்தை பார்வையிட்டு விட்டு பழைய வீட்டு தோட்டத்தில் பூக்களை பறித்து வருவது வழக்கம். அதுபோல் கிருஷ்ண மூர்த்தி பழைய வீட்டுக்கு பூப்பறிக்க சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பழைய வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ண மூர்த்தியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ண மூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து அவரது மகன் கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்