

முட்டாள்தனமான மீறல்:
ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இது அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் "முட்டாள்தனமான மீறல்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப் கருத்து:
ஒரு ஆளில்லா விமானம் கப்பலின் மேல் தளத்தை தாக்கியதாகவும், "சேதம் ஏற்பட்டதாகவும்", ஆனால் கப்பலால் தொடர்ந்து பயணிக்க முடிந்ததாகவும் டிரம்ப் கூறினார். மேலும், அமெரிக்கா மற்ற மூன்று ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டதில், தாக்குதல் நடந்த கப்பலோ அல்லது நேரமோ குறிப்பிடப்படவில்லை. ஆனால், நேற்று (வியாழக்கிழமை) ஓமன் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் மீது எறிபொருள் தாக்கியதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்திருந்தது.
போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும் ஈரானும் முயன்று வரும் ஒரு பதற்றமான காலகட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது.