அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ஒரு அதிரடியான கருத்தை முன்வைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து கிரீன்லாந்தை பாதுகாக்க தயார் என அமெரிக்காவை சீண்டும் வகையில் ஈரான் அறிவித்துள்ளது.
கிரீன்லாந்து விவகாரம்:
டென்மார்க்கின் கிரீன்லாந்து தீவு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்றும், அதை விலைக்கு வாங்கத் தயாராக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் கிரீன்லாந்து ஒரு விற்பனைப் பொருள் அல்ல என்று டென்மார்க் அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இருப்பினும் ராணுவ நடவடிக்கை மூலம் அதைக் கைப்பற்ற டிரம்ப் கைப்பற்றுவார் என்ற அச்சமும் நிலவுகிறது. இது ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது.
ஈரான் அறிவிப்பு
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஈரான், அமெரிக்காவிற்கு எதிராக ஒரு புதிய காய் நகர்த்தியுள்ளது.
"கிரீன்லாந்து ஒருமுறை கோரிக்கை விடுத்தால் போதும், அவர்களை அமெரிக்காவிடமிருந்து பாதுகாக்க ஈரான் உடனடியாகக் களமிறங்கும்" என்று ஈரான் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.