என் மலர்
உலகம்

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்... ரிக்டரில் 5.1 ஆக பதிவு
- மியான்மரில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
- மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல்.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் தெருக்களில் மக்கள் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலறினர். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மியானமரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, மேலும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
இதுவரை, 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 3,400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story