search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும்-  மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி உறுதி
    X

    மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி 

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும்- மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி உறுதி

    • அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டிய தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
    • குறைந்த விலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கப்படும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடமிருந்து எரி பொருள் கொள்முதல் செய்வதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது கடந்த ஏப்ரல் மாதம் முதல் 50 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் மொத்த கச்சா எண்ணெயில் இது 10 சதவீதமாக உள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, மத்திய பெட்ரோலித்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், உக்ரைனுடன் ரஷியா போர் புரிந்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நடவடிக்கை தொடரும் என்று கூறினார். இந்திய குடிமக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்க வேண்டிய தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள் முதல் செய்ய கூடாது என்று எந்த நாடும் இந்தியாவை நிர்பந்திக்க வில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். குறைந்த விலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய்யை வாங்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×