பாலஸ்தீனியர்களை இடம்பெயரச் செய்ய பெண்கள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்க்கும் இஸ்ரேல் - ஐநா நிபுணர்கள் குழு கவலை

பாலஸ்தீனியர்களின் உயிரை விட அரசியல் லாபம், ராணுவ வியூகங்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பாலஸ்தீனியர்களை இடம்பெயரச் செய்ய பெண்கள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்க்கும் இஸ்ரேல் - ஐநா நிபுணர்கள் குழு கவலை
Published on

இஸ்ரேலின் பாலியல் மற்றும் பாலின வன்முறையானது பாலஸ்தீனிய சமூகத்தை பயமுறுத்தவும், அவர்களை அடிபணிய வைக்கவும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.

பாலஸ்தீனியர்களின் அன்றாட வாழ்க்கையில் பாலியல் வன்முறை ஒரு அங்கமாக மாற்றப்பட்டுள்ளது. இது மக்களை அச்சுறுத்தவும், அடிபணிய வைக்கவும், அவர்க0ளின் நிலத்திலிருந்து அவர்களைக் கட்டாயமாக வெளியேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.

பாலஸ்தீனியர்களின் உயிரை விட அரசியல் லாபம், ராணுவ வியூகங்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சோதனச் சாவடிகள், சிறைச்சாலைகள், வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் இஸ்ரேலிய குடியேறிகளுடனான மோதல்கள் என அனைத்து இடங்களிலும் இத்தகைய வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன.

பாலியல் வன்முறையானது சமூகத்தில் ஒருவித அவமானத்தையும் களங்கத்தையும் ஏற்படுத்தி, சமூக ஒற்றுமையைச் சிதைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இது பாலஸ்தீனியர்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தூண்டுகிறது, இது மறைமுகமாக இன அழிப்புக்கு வழிவகுக்கிறது.

காசாவில் உள்ள மகப்பேறு மற்றும் பாலியல் சுகாதார மையங்களை இஸ்ரேல் திட்டமிட்டு அழித்துள்ளது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது பாலஸ்தீனியர்களின் எதிர்கால சந்ததி மற்றும் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் ஒரு நீண்ட காலத் திட்டமிட்ட நடவடிக்கை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய அலட்சியப்போக்கு சர்வதேச சட்டத்தின் வலிமையைக் குறைப்பதுடன், வன்முறைச் சுழற்சி மேலும் தொடரவே வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அனைத்து வகையான பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐநா நிபுணர்கள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com