என் மலர்
உலகம்

இங்கிலாந்திற்கு செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை
- இங்கிலாந்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
- போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என அறிவுறுத்தல்
இங்கிலாந்தில் 3 இளம்பெண்கள் மரணம் அடைந்ததை அடுத்து பரவிய வந்ததிகளால் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் இளம்பெண்களை கொன்றார் என்று பரவிய வதந்தியால் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் போது கவனமாக இருக்கும்படி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளூர் பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் செய்திகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றும்படியும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story






