

இந்தியர்களை குறிப்பிட்ட சமூக ஊடக பதிவு ஒன்றில் உள்ள கருத்துக்கள் "வெளிப்படையாகவே அறியாமையின் அடிப்படையிலானவை, பொருத்தமற்றவை மற்றும் தரம் தாழ்ந்தவை" என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவை 'நரகக் குழி' என்று வர்ணித்து ஒரு பாட்காஸ்டர் பதிவிட்ட இழிவான பதிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்த பதிவுக்கு டிரம்ப்-ஐ நேரடியாக குறிப்பிடாமல், வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இந்த கருத்துக்கள், நீண்ட காலமாக பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்திய - அமெரிக்க உறவின் யதார்த்தத்தை நிச்சயமாக பிரதிபலிக்கவில்லை" என்று கூறியுள்ளது.
"அந்தக் கருத்துக்களையும், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையையும் நாங்கள் பார்த்தோம். அந்தக் கருத்துக்கள் வெளிப்படையாகவே போதிய தகவலின்றி, பொருத்தமற்றவையாக மற்றும் தரம் தாழ்ந்தவையாக உள்ளன.
பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் நீண்ட காலமாக அமைந்துவரும் இந்தியா-அமெரிக்க உறவின் யதார்த்தத்தை அவை நிச்சயமாகப் பிரதிபலிக்கவில்லை," என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறினார்.
டிரம்ப், அந்த பாட்காஸ்டரின் நான்கு பக்க உரையாடல் பதிவு என்று கூறப்படும் ஒன்றை, இந்தியர்கள் மீதான இழிவான கருத்துக்களுடன் பகிர்ந்தார். பின்னர், நிலைமையை சரிசெய்யும் ஒரு நடவடிக்கையாக, "உயர்மட்டத்தில் இருக்கும் எனது நல்ல நண்பர்" ஒருவரால் வழிநடத்தப்படும் இந்தியா ஒரு "சிறந்த" நாடு என்று டிரம்ப் நம்புவதாக அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.