சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயிலில் இருந்து விழுந்து போலீஸ்காரர் பலி

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயிலில் இருந்து விழுந்து போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயிலில் இருந்து விழுந்து போலீஸ்காரர் பலி
Published on

தாம்பரம்:

பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்தவர் சுபாஷ் (27). சொந்த ஊர் விழுப்புரம்.

இவர் நேற்று முன்தினம் எழும்பூரில் இருந்து சேலம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாசல் அருகே நின்று பயணம் செய்தார்.

ரெயில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், செங்கல்பட்டுக்கும் இடையே ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் கீழே தவறி விழுந்தார்.

படுகாயம் அடைந்த அவர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் இன்று மரணம் அடைந்தார். செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com