திருவண்ணாமலையில் இன்று தை மாத பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியான இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
Published on

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

வருகிற 8-ந் தேதி (சனிக் கிழமை) பகல் 1.43 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12.43 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com