என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நமது குரலை உயர்த்த வேண்டும்- பினராயி விஜயன்
- மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமேயின்றி மத்திய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோதமானது.
- நாட்டின் அரசியல் ஒற்றை தலைமையை நோக்கி செல்கிறது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டு கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாநில அரசுகள், மத்திய அரசின் பிரச்சார வாகனங்கள் போல நடத்தப்படுகின்றன.
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நமது குரலை உயர்த்த வேண்டும்.
மாநில அரசுகளின் ஆலோசனையின்றி தொகுதி மறுசீரமைப்பு நடைபெறுவதால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.
மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமேயின்றி மத்திய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோதமானது.
நாட்டின் அரசியல் ஒற்றை தலைமையை நோக்கி செல்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை நிலை நாட்டுவதற்காக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
சர்க்காரியா கமிஷன் அளித்த நல்ல பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






