22 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் கிடாவெட்டி கொண்டாட்டம்

மொரப்பூர் அருகே உள்ளது எம்.வேட்ரப்பட்டி கிராமம்.கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையன் ஏரி நிறைந்தது. அதன் பிறகு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்து போனது.
22 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் கிடாவெட்டி கொண்டாட்டம்
Published on

மொரப்பூர்:

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எம்.வேட்ரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வேட்டையன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் அதன் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையன் ஏரி நிறைந்தது. அதன் பிறகு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்து போனது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மொரப்பூர் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வேட்டையன் ஏரி 22 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் நிரம்பியதால் கிராம மக்கள் ஆடுவெட்டி கொண்டாடினார்கள். இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com