மனு கொடுக்க சென்ற விஜய்.. செல்ஃபி எடுத்துக் கொண்ட அலுவலர்கள்.. வீடியோ வைரல்

நேற்று முன்தினம் காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அன்று பிற்கலில் கவனர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
மனு கொடுக்க சென்ற விஜய்.. செல்ஃபி எடுத்துக் கொண்ட அலுவலர்கள்.. வீடியோ வைரல்
Published on

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதனிடையே, நேற்று முன்தினம் காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அக்கடிதத்தில், எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அன்று பிற்கலில் கவனர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். ஃபெஞ்சல் புயலுக்கான நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்து இருந்தார்.

கட்சி தொடங்கியது முதல் அறிக்கை மூலமே அரசியலில் ஈடுபட்ட வந்த விஜய், முதன் முதலாக கடந்த திங்கள் கிழமை அன்று ராஜ்பவன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது அவரின் அரசியல் நகர்வுகள் தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதினர்.

இந்த நிலையில், கவர்னரை சந்திக்க சென்ற த.வெ.க. தலைவர் விஜயுடன் அலுவலர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கவர்னரை சந்தித்த பின் விஜயுடன் புகைப்படம் எடுக்க அலுவலர்கள் ஆர்வம் காட்டியதை அடுத்து மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அவர்களுடன் கை குலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய். 

X

Maalai Malar
www.maalaimalar.com