

சென்னை:
தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்வு விழா நடைபெற்ற சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து இட்டார்
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
விழாவை முடித்துக்கொண்டு தலைமைச் செயலகத்தை நோக்கி முதலமைச்சர் விஜய் பயணித்தார். முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தை அடைந்ததும் காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கண்டார். இதனை தொடர்ந்து, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். அதனை தொடர்ந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புக்கான கோப்புகளில் கையெழுத்து இட்டார்