TN Assembly Election| விஜய்யை காண குடும்பம், குடும்பமாக குவிந்த பொதுமக்கள்- தி.நகர் களை கட்டியது

எவ்வளவு நேரமானாலும் சரி எங்கள் அண்ணா விஜய்யை பார்த்து விட்டுதான் போவோம் என குவிந்து உள்ளனர்.
TN Assembly Election| விஜய்யை காண குடும்பம், குடும்பமாக குவிந்த பொதுமக்கள்- தி.நகர் களை கட்டியது
Published on

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மாலை தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தி.நகர் வேட்பாளர் என்.ஆனந்தை ஆதரித்து கட்சி தலைவர் விஜய் முத்து ரங்கன் சாலையில் பிரசாரம் செய்கிறார். பிரசாரத்தையொட்டி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட செயலாளர் க.அப்புனு தலைமையில் பொது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு அவசர மருத்துவ வசதியும் செய்யப்பட்டு உள்ளன.

மாலை 4 மணிக்கு பிரசாரம் நடைபெறும் நிலையில் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் இன்று காலை முதலே பொதுமக்கள் அந்த பகுதியில் குவியத் தொடங்கி உள்ளனர்.

பெண்கள் பலர் குடும்பத்துடன் வந்து காத்திருக்கின்றனர். எவ்வளவு நேரமானாலும் சரி எங்கள் அண்ணா விஜய்யை பார்த்து விட்டுதான் போவோம் என குவிந்து உள்ளனர். விஜய் வருகையையொட்டி தி.நகர் பகுதியில் விசில் விற்பனை மற்றும் தொப்பி, கட்சி கொடிகள், விஜய் புகைப்பட விற்பனை சூடுபிடித்துள்ளது. மாலை 4 மணிக்கு விஜய் பிரசாரம் நடைபெறும் முத்துரங்கன் சாலையில் பகல் 12 மணி முதலே விசில் சத்தம் ஓங்கி ஒலித்து தி.நகரே களை கட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com