

தமிழ் நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய சென்னை வேலூரில் vox pops நடத்தினோம்.
இதில், கிட்டத்தட்ட திமுகவும், தவெகவும் அதிகளவில் ஆதரவு பெற்றுள்ளன. தொடர்ந்து அதிமுக-வும், நாம் தமிழர் கட்சியும் குறைந்த ஆதரவை பெற்றுள்ளன.
அதன்படி, வேலூரில் 33 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு 15 பேர் வாக்களிப்போம் என தெரிவித்தனர்.
தி.மு.க-வை தொடர்ந்து த.வெ.க.விற்கு 14 பேரும், அ.தி.மு.க.-விற்கு 3 பேரும் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.