

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை மறுநாள்) திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக https://results.eci.gov.in/யிட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் வருகிற 4-ந் தேதி காலை 8 மணி முதல் 5 மாநில தேர்தல் முடிவுகளை தனித்தனியாக உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
இது தவிர 'ECINET' மற்றும் 'Voter Helpline' என்ற செல்போன் செயலிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.