

அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
* கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்.
* அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜயும் கூறினார்.
* 2 இடங்களை பெற்றிருக்கிற நிலையில் நிபந்தனை ஆதரவை வழங்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.