என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சிக்கன நாள் வாழ்த்து
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சிக்கன நாள் வாழ்த்து

    • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30-ம் நாள் "உலக சிக்கன நாள்" கொண்டாடப்படுகிறது.
    • "செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்" என்னும் உறுதி கொண்டு சிறப்பாக வாழ்ந்திடுவோம்

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உலக சிக்கன நாள் வாழ்த்து செய்தி வருமாறு:-

    பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30-ம் நாள் "உலக சிக்கன நாள்" கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாகச் செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த "உலக சிக்கன நாள்" வலியுறுத்துகிறது.

    பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், விவசாயிகள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், முறைசாராத் தொழிலில் ஈடுபடுவோர், சுய தொழில் புரிவோர், மகளிர் ஆகிய அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேர்ந்து சேமிப்புக் கணக்கினைத் துவங்கிட இந்த உலக சிக்கன நாளில் கேட்டுக்கொள்கிறேன். "செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்" என்னும் உறுதி கொண்டு சிறப்பாக வாழ்ந்திடுவோம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×