தாமதிக்கும் விசிக.. ஆதரவு இல்லையென ஐயுஎம்எல் மறுப்பு - விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி!

விசிக நாளை ஆதரவு கடிதம் வழங்கும் வரை விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை.
தாமதிக்கும் விசிக.. ஆதரவு இல்லையென ஐயுஎம்எல் மறுப்பு - விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி!
Published on

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது.

ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது.

இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்கள் வென்ற காங்கிரஸ் நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் இன்று ஆதரவு தெரிவித்தன.

விஜய் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

முதலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற 2 இடங்களை கொண்ட ஐயுஎம்எல் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால் ஐயுஎம்எல் அந்த செய்திகளை மறுத்து, தவெகவுக்கு ஆதரவு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.

மேலும் விசிக ஆதரவு தருவதாக வாய்வழியாக கூறப்பட்டாலும் கடிதம் நாளை தான் வழங்கப்படுகிறது.

2 இடங்கள் கொண்ட விசிக நாளை ஆதரவு கடிதம் வழங்கும் வரை விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை.

தவெகவுக்கு இன்னும் 1 இடம் தேவைப்படுவதால் அதுவரை அவர் பதவியேற்பு இழுபறியே என்று கூறப்படுகிறது.

விசிக ஆதரவு கடிதம் நாளை ஆளுநர் மாளிகைக்கு செல்வது பொறுத்தே முடிவு உள்ளது. மறுபுறம் நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com