பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 94.31% மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 94.31% மாணவர்கள் தேர்ச்சி
Published on

சென்னை:

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரர் ராஜ்மோகன் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பொதுத்தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 96.47 சதவீதம் மாணவிகளும், 92.15 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com