4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு!
Published on

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் ஏப்.23ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவும், மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக ஜவஹர், பெரம்பலூர் பிரபாகர், தஞ்சை சுந்தரவதனம், தென்காசிக்கு மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com