முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை - அரசாணை வெளியீடு

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை - அரசாணை வெளியீடு
Published on

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும், போதைப்பொருட்கள் தடுப்புப்படை அமைக்க கையெழுத்திட்டார்.

இந்நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.ஜி. தலைமையிலான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பி, 4 ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள்.

குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து சிறப்பு அதிரடிப்படை கண்காணிக்கும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com