என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்க வேண்டி இருக்கு- சீமான்
- தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்.
- பெரியாரை எதிர்த்து அண்ணா வெளியில் வந்து தி.மு.க.வை. தொடங்கினார்.
கோவை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்களும், மாற்றுக்கட்சியினரும் இன்று தி.மு.க.வில் இணைந்துக் கொண்டனர்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
* கட்சியில் சேர்ந்த பிறகு தான் எண்ணிக்கை தெரியும். சேருவதற்கு முன்பு எப்படி தெரியும்.
* மகிழ்ச்சி... தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள்...
* தி.மு.க.வையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்க வேண்டி இருக்கிறது.
* துரைமுருகன் கூறியது என்னை பற்றி இல்லை. அண்ணாவையும், அவரது தலைவர் கலைஞரை சொல்லியிருக்கிறார்.
* பெரியாரை எதிர்த்து அண்ணா வெளியில் வந்து தி.மு.க.வை. தொடங்கினார்.
* A டீமாக தி.மு.க. இருப்பதால் நான் B டீம் ஆகிவிட்டேன் என்றார்.






