போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை

கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றுகிறார். இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதி தலைவரும் பங்கேற்றனர்.
போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை
Published on

சென்னை:

நம் நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்ற உள்ளனர்.

தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா காலை தொடங்கி நடைபெறுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வழங்குகிறார்.

இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து கவர்னர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதி தலைவரும் பங்கேற்றனர்.

மெரினாவில் குடியரசு தினவிழா நடைபெறும் பகுதி போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com