காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

அணைக்கு வினாடிக்கு 321 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.பாசனப்பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
Published on

மேட்டூர்:

மேட்டூர் அணை கடந்த ஆண்டு 3-வது முறை நிரம்பியது. குறிப்பாக ஆண்டின் கடைசிநாளில் அணை 3-வது முறையாக நிரம்பியதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது கடந்த 1-ந் தேதி முதல் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசனப்பகுதியில் தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.

இதை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 112.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 321 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com