சுந்தரா டிராவல்ஸ் அல்ல... 'மக்களின் டிராவல்ஸ்' - முதலமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

எடப்பாடி பழனிசாமிக்கு டாடா... பை பை காட்டி வரும் தமிழக மக்கள், வரும் தேர்தலில் “Good Bye" சொல்ல தயாராகிவிட்டனர்.ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகும் மக்களின் நம்பிக்கை டிராவல்ஸை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
சுந்தரா டிராவல்ஸ் அல்ல... 'மக்களின் டிராவல்ஸ்' -  முதலமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்
Published on

மயிலாடுதுறையில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

எடப்பாடி பழனிசாமிக்கு டாடா... பை பை காட்டி வரும் தமிழக மக்கள், வரும் தேர்தலில் "Good Bye" சொல்ல தயாராகிவிட்டனர்.

சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் இ.பி.எஸ். வாயிலிருந்து பொய்யாக வருகிறது என்று விமர்சித்து இருந்தார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,

இது சுந்தரா டிராவல்ஸ் அல்ல... ஸ்டாலின் அவர்களே இது மக்களின் டிராவல்ஸ். ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகும் மக்களின் நம்பிக்கை டிராவல்ஸை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com