பாமக நிறுவனர் ராமதாசுக்கு கொரோனா- அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுகோள்

தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.விரைந்து நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
ராமதாசு
ராமதாசு
Published on

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாசு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்

கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அய்யா மருத்துவர் இராமதாசு விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com