என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ள 6 மாவட்டங்கள்...
    X

    காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ள 6 மாவட்டங்கள்...

    • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • சென்னையிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×