என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் பெய்து வரும் மழை... காலை 10 மணிவரை மழைக்கு 18 வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
    X

    சென்னையில் பெய்து வரும் மழை... காலை 10 மணிவரை மழைக்கு 18 வாய்ப்புள்ள மாவட்டங்கள்...

    • சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
    • இன்று காலை 10 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழக மற்றும் அதனைய ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையில் நேற்று இரவு மிதமான மழையும் பெய்தது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனிடையே, இன்று காலை 10 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாகை, நீலகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×