முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை தொடர்ந்து, சென்னையில் நடைபெற்று வந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மதிப்பெண் மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என சட்ட பேரவையில் முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.

இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர் மற்றும் பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com