

மத்திய கிழக்கு போர் சூழல், ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடு போன்ற காரணங்களால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுகட்ட கடந்த 15-ந்தேதி நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருந்த நிலையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் குறைந்த நிலையில், நேற்று மேலும் 6 காசுகள் குறைந்தது.
அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.104.51-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.96.13-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.105.31-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.96.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.