"பக்கெட்" சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு

தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டி.தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும்.
"பக்கெட்" சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு
Published on

அ.தி.மு.க.வில் ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடத்தி வரும் சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் என்றால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்கிற கணக்கிலேயே ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் "பக்கெட்" சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அந்த மனுவில் "தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும். அல்லது, இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்.

இரட்டை இலை சின்னம் முடங்கும் பட்சத்தில் ராமநாதபுரத்தில், தனக்கு பக்கெட் சின்னத்தை வழங்க வேண்டும்" என தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த மனுவில் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com