

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடன் இணைந்து ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
* பாஜக-வின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது.
* தமிழகத்தை கைப்பற்ற பாஜக நினைக்கிறது.
* டெல்லியில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்களை பாஜக நிறுத்தியது.
* முதல்வர் ஸ்டாலின் எனது சகோதரர்.
* மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் உழைக்கின்றார்.
* தமிழகம் செய்த நலத்திட்டங்களை வேறு எந்த மாநிலமும் செய்ததில்லை.
* என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும்.
* தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல, இந்தியாவுக்காகவும் போராடுகிறார் ஸ்டாலின்.