என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது- மு.க.ஸ்டாலின்
- திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
- நாட்டில் எந்த பெரிய ஒரு மாநிலமும் பெறாத வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார். உதவிப்பொறியாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வானோருக்கு நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக பொருளாதாரம் 11.19 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்கிறேன்.
* தமிழகத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்கமாக வளர்ந்துள்ளது என மத்திய அரசு கூறி உள்ளது.
* ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கமாக இருந்தது.
* தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது.
* திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
* பட்ஜெட்டில் நாம் கணித்ததை விட 2.2 விழுக்காடு அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சியை எட்டி உள்ளோம்.
* 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டி உள்ளது.
* இந்தியாவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக தமிழகம் உள்ளது.
* தமிழக மக்களுக்கு வெற்றி செய்தியை காணிக்கையாக்குகிறேன்.
* தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தான் நேற்று இரவிலிருந்து talk of thd town, talk of the nation ஆக உள்ளது.
* நாட்டில் எந்த பெரிய ஒரு மாநிலமும் பெறாத வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது.
* இன்னும் அதிகமான உயரத்தை அடைவதற்கான பயணத்தை தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






