ஓரணியில் தமிழ்நாடு - பரப்புரையை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 5 கேள்விகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
ஓரணியில் தமிழ்நாடு - பரப்புரையை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

ஜூலை 3-ந்தேதி முதல் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வீடு அருகே உள்ள குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் செயல்பாடு, மத்திய அரசின் செயல்பாடு குறித்து கேள்விகள் கேட்டு பரப்புரை தொடங்கினார். 5 கேள்விகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வினர் அவரவர் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com