என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்- அமைச்சர் ரகுபதி
- பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
- பெண்கள் அதிகம் கல்வியறிவு பெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.
* வழக்கை மறைப்பதற்கான அவசியம் தி.மு.க. அரசுக்கோ, முதலமைச்சருக்கோ இல்லை.
* பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
* கட்சிக்காரர்களே தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* தி.மு.க. தலைவர்கள் வெளியில் செல்லும்போது யார் அருகில் வந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என கண்காணிக்க முடியாது.
* ஒரு கூட்டம், விழா நடக்கிறது என்றால் அமைச்சர்களுக்கு அருகில் வந்து பலர் புகைப்படம் எடுப்பது சகஜம்தான்.
* ஞானசேகரன் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் போட்டோ எடுத்திருக்கலாம்.
* தமிழ்நாட்டில் பெண்கள் துணிச்சலாக வந்து கல்வி கற்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றனர்.
* மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை அரசியலாக்கி பெண்கள் வெளியில் வந்து உயர்கல்வி பயில்வதை தடுக்க பார்க்கிறார்கள்.
* பெண்கள் அதிகம் கல்வியறிவு பெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாலியல் வழக்குகளில் சிக்கிய பா.ஜ.க.வினருக்கு அக்கட்சியினர் ஆதரவு பேரணி நடத்துகின்றனர்.
* நன்னடத்தை காரணத்தை கூறி பா.ஜ.க.வை சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
* தி.மு.க. பொறுப்பேற்ற பின் அனைத்து உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் திறந்து வருகிறார் முதலமைச்சர்.
* அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததால் தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக மகளில் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
* பெண்கள் வாழ்வதற்காக பாதுகாப்பான மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.