சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் பிரச்சனைகளுக்கு 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியே காரணம் - அமைச்சர் ராஜ்மோகன்

விவசாயிகள் சங்கத்தலைவர் மீது குண்டாஸ் போட்ட அரசு திமுக அரசு தான்.
Minister Rajmohan
Published on

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்து பேசியதாவது:

* இருமொழிக் கொள்கை, மாநில உரிமையில் திமுகவை த.வகெ. அரசு பின்பற்றுகிறது.

* நான் முதல்வன் திட்டத்தை முடக்கவோ, மாற்றவோ தவெக அரசுக்கு எந்த திட்டமும் இல்லை.

* திமுக ஆட்சியின் மீதான ஏமாற்றம் தான் த.வெ.க.விற்கான வாய்ப்பு. தவெ.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

* சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் பிரச்சனைகளுக்கு 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியே காரணம்.

* மின்தடையை தமிழகத்திற்கு அறிமுகம் செய்ததே திமுக தான்.

* விவசாயிகள் சங்கத்தலைவர் மீது குண்டாஸ் போட்ட அரசு திமுக அரசு தான்.

* நான் முதல்வன் என கூறிவிட்டு ஒரே குடும்பத்தில் இருந்து முதலமைச்சர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

* பள்ளி மாணவர்களின் புத்தக பையில் படம் இல்லாவிட்டாலும் லேப்டாபில் ஏன் முதலமைச்சர் படத்தை போட்டீர்கள்?.

* 3 வருடமாக தொழில்நுட்ப கோளாறு என கூறி நேரலையை துண்டித்தார் முன்னாள் சபாநாயகர்.

* அரசு பள்ளியில் ரீல்ஸ் எடுத்தவர் நேற்று கட்சியில் நீக்கப்பட்டுள்ளார்.

* கூட்டணி கட்சியினர் அவர்கள் தேவைக்கு சோபா வாங்கியுள்ளனர். கூட்டணி தலைவர்களுக்கு திமுகவினர் பிளாஸ்டிக் சேர் கொடுத்தனர்.

* சிங்கப்பெண்கள் திட்டத்தை இனி யாரும் தவறாக பேச அனுமதிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com