என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

3½ ஆண்டுகளில் தமிழகத்தில் 1,670 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன- அமைச்சர் தகவல்
- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 544 புதிய நியாய விலை கடைகள் றக்கப்பட்டுள்ளது.
- வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மேலூர் தொகுதி சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மேலூர் தொகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடைகள் அமைத்து தர வேண்டும் என்ற கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 544 புதிய நியாய விலை கடைகளும், 1,126 புதிய பகுதி நேர நியாய விலை கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 1,670 புதிய நியாய விலை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மேலூர் தொகுதி சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






