அமைச்சர் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத்துறை 1 மணி நேரம் விசாரணை

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.
அமைச்சர் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத்துறை 1 மணி நேரம் விசாரணை
Published on

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

சோதனைகள் முடிவடைந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரனவிச்சந்திரன் விசாரணைக்கு ஆஜரானார்.

இதில், கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறையினர் சுமார் ஒரு மணி நேர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்த நிலையில் கே.என்.ரவிச்சந்திரன் மீண்டும் புற்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com