

கவர்ச்சியால் தவெக ஆட்சி அமைத்ததாக கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
* அரசியல் என்பது மக்களின் நம்பிக்கை பெறுவது, அன்பை பெறுவது.
* திமுக ஏன் தோற்றது என்பதை பற்றி தெரியாமல் பேசி கொண்டிருக்கிறது.
* இன்ஸ்டாகிராமால் தோற்றதாக திமுக தலைவரே பேசி கொண்டிருக்கிறார்.
* வேண்டுமானால் இன்ஸ்டாகிராம் ஓனரை திமுகவில் சேர்த்து கொள்ளுங்கள்.
* திமுக தலைவரை சுற்றி 10 பேர் அமர்ந்து கொண்டு மாயையை உருவாக்கி வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்